ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தேதி மற்றும் பூஜை செய்ய வேண்டிய நேரம்

சரஸ்வதி பூஜை என்பது கல்வியின் தேவதை சரஸ்வதியை வழிபடும் ஒரு முக்கியமான பண்டிகை

ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தேதி மற்றும் பூஜை செய்ய வேண்டிய நேரம் வருகின்ற புரட்டாசி மாதம் 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை 11.10.2024 மதியம் 1:00 முதல் 1:30 மணி அளவில் பூஜை செய்வது யோகத்தை அதிகரிக்கும் அன்று மேற்கு திசை பார்த்து பூஜை செய்வதோ அல்லது வெளியே செல்வதோ தவிர்க்கவும் அப்படி செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் சற்று இனிப்பு சாப்பிட்டு விட்டு செல்ல வேண்டும் மேலும் அன்று மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.



 சரஸ்வதி பூஜை அன்று வழிபாட்டில் வைக்க வேண்டியவை:


1. **பள்ளிக் கருவிகள்** (கற்றல் சாதனங்கள்):

   - புத்தகங்கள், நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் போன்ற கல்வி உபகரணங்கள்.


2. **வீணை அல்லது ஏதாவது இசைக்கருவிகள்**:

   - தேவதை சரஸ்வதி வீணையை பிடித்துப் பாடுவதால், வீணை அல்லது வேறு இசைக்கருவிகளையும் வைக்கலாம்.


3. **பூஜை திரவியங்கள்**:

   - புஷ்பங்கள் (மல்லிகை, செவ்வந்தி, கதிர்மலர் போன்றவை)

   - தூபம், தீபம்

   - அகற்பத்தி

   - குங்குமம், சந்தனம்

   -துளசி


4. **பழங்கள் மற்றும் நீர்மங்கள்**:

   - வெற்றிலை, பழங்கள் (வாழைப்பழம், ஆப்பிள், மாங்கனி)

   - தேங்காய், பூக்கள் மாலைகள்


5. **நிவேத்யம்**:

   - சர்க்கரை பொங்கல், சுண்டல், பருப்புகள் போன்ற சிறப்பு உணவுகள்.

  

6. **துணிகள்**:

   - புதிய வஸ்திரங்கள், குறிப்பாக குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்கள், புதிய கல்வி உபகரணங்கள்.


7. **காயத்ரி மந்திரம் அல்லது சரஸ்வதி மந்திரம் ** போன்றவற்றை சொல்லலாம்.


ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தின் சிறப்பு

 பிரதோஷம் எனப்படும் இந்த தினம், சிவபெருமான் மற்றும் நந்தி பக்தர்களுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் சிறப்பு மற்றும் அருள்களை நேரடியாக அனுபவிக்க விரும்பும் பக்தர்கள், பிரதோஷ காலத்தில், சிவபெருமான் மற்றும் நந்திக்கு அபிஷேகம் செய்யுவது விசேஷமாகக் கருதப்படுகிறது, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில்.



ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தின் சிறப்பு

  1. சூரிய பகவானின் மகிமை: ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சூரிய பகவானுடன் தொடர்புடையது. சூரிய பகவான் நம் வாழ்வில் ஒளி, நலம், ஆரோக்கியத்தை வழங்குபவராக கருதப்படுகிறார். அன்றைய தினம் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தால், சூரிய பகவானின் கிருபையும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

  2. நந்திக்கு அபிஷேகம்: நந்தி பகவானுக்கு அபிஷேகம் செய்வதால், அவன் வழியாக சிவபெருமானின் அருள் கிடைக்கும். நந்தி, சிவபெருமானின் உயர்ந்த பக்தனாகவும், அனைத்துப் பாவங்களையும் நீக்கி நல்வழிகாட்டியாக விளங்குகின்றான்.

  3. ஆரோக்கிய நலம்: ஞாயிற்றுக்கிழமை பிரதோஷத்தில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானை தரிசனம் செய்தால், உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

  4. தவறுகள் நீக்கம்: இந்நாளில் பிரதோஷத்தில் சிவபெருமானை வழிபட்டால், கடந்தகால பாவங்கள் அனைத்தும் மறைந்துவிடும். நலிந்த நிலைமைகள் சரியாகும், மற்றும் வாழ்க்கையில் அனைத்து திசைகளிலும் முன்னேற்றம் காணலாம்.

  5. சிவ கிருபை: ஞாயிறு பிரதோஷத்தில் சிவபெருமானுக்கு பாலால், இளநீரால், மஞ்சளால், பன்னீர், துளசி போன்றவைகளால் அபிஷேகம் செய்தால், அவரின் பேரருள் கிடைக்கும்.

அன்றைய வழிபாட்டு முறைகள்

  • சிவ லிங்கத்திற்கு அபிஷேகம்: 6 முதல் 6:30 மணி வரை பிரதோஷ காலம் என்று சொல்லப்படுகிறது. இதில் பால், நெய், தேன், பன்னீர் போன்றவைகளால் அபிஷேகம் செய்வது மிகவும் பயனுள்ளதாகும்.
  • நந்திக்கு தீபம் ஏற்றுதல்: நந்தி பகவானுக்கு தீபம் ஏற்றி, சிறப்பு பூஜை செய்தல் முக்கியம்.
  • சிவ மந்திரங்கள்: "ஓம் நம சிவாய" மந்திரம் ஜபம் செய்தல் மிகுந்த பலனை தரும்.

இந்நாளில் செய்யப்படும் அனைத்து வழிபாடுகளும், பக்தர்களுக்கு சிவபெருமானின் ஆசியையும், நந்தியின் கருணையையும் நிச்சயமாகப் பெறச்செய்யும்.

Benefits of seeing lord shiva and nandi abhisekam on sunday pradhosam

Pradosham is considered an auspicious time dedicated to Lord Shiva and his divine vehicle, Nandi (the bull). When Pradosham falls on a Sunday, it is particularly significant, as Sunday is governed by the Sun (Surya), who is also considered a form of divine energy. Performing or witnessing Lord Shiva and Nandi Abhishekam (sacred bathing ceremony) during this time is believed to offer unique spiritual benefits.



Here are the benefits of witnessing or performing Abhishekam on a Sunday Pradosham:

1. Relief from Past Karma:

  • Pradosham is believed to be a time when Lord Shiva forgives sins and karmic debts. The Abhishekam washes away past misdeeds, especially on Sunday, which is considered a day of purification.

2. Improves Health and Longevity:

  • Lord Shiva is known as the destroyer of ignorance and diseases. Sunday, governed by Surya (the Sun), is also linked with health and vitality. Participating in the Abhishekam can enhance physical well-being and increase life longevity.

3. Peace of Mind and Prosperity:

  • Watching or performing the ritual calms the mind and is said to bring peace and harmony into one’s life. The sacred energy during Sunday Pradosham is believed to remove obstacles and provide prosperity in all aspects of life.

4. Strengthens Family and Social Bonds:

  • It is believed that Lord Shiva blesses his devotees with harmonious relationships, and performing or witnessing the Abhishekam on a Sunday Pradosham strengthens family unity and bonds.

5. Blessings for Enlightenment and Moksha:

  • Lord Shiva, especially when worshiped with Nandi, grants spiritual growth. Sunday Pradosham is seen as a pathway to enlightenment (jnana) and liberation from the cycle of birth and death (moksha).

6. Overcoming Enemies and Negative Influences:

  • Pradosham is a time to pray for protection against enemies and negative energies. The power of Lord Shiva on this day helps in overcoming adversities.

7. Enhanced Connection to Divine Energies:

  • Performing Abhishekam to both Lord Shiva and Nandi on Sunday Pradosham helps strengthen the connection to cosmic energies, bringing divine grace and higher wisdom into one’s life.

Thus, Sunday Pradosham is an especially potent time for those seeking the blessings of Lord Shiva and Nandi, providing physical, emotional, and spiritual well-being. The devotees believe that participating in this ritual enhances one’s progress towards both material and spiritual goals.

அட்சய திருதியை அன்று சூரிய பகவானை துதிக்கக்கூடிய 108 நாமாவளி

அட்சய திருதியை அன்று சூரிய பகவானை துதிக்கக்கூடிய, கீழ்கண்ட 108 நாமாவளியை தவுமியர் யுதிஷ் டிரருக்கு கூறியதாகவும், இதை யுதிஷ்டிரர் சூரிய பக வானை பார்த்து கூறியதாகவும் சொல்வார்கள்.




1. சூரிய, 

2. அர்யமா, 

3. பக, 

4. த்வஷ்டா, 

5. பூஷா, 

6. அர்க, 

7. சவிதா, 

8. ரவி, 

9. கபஸ்தி மான், 

10. அஜ, 

11. கால, 

12. ம்ருத்யு, 

13. தாதா, 

14. ப்ரபாகா,

15. ப்ருத்வீ, 

16. ஆப், 

17. தேஜ், 

18. க (ஆகாஷ்), 

19. வாயு, 

20. பராயண், 

21. ஸோம், 

22. ப்ருகஸ்பதி, 

23. சுக்ர, 

24. புத, 

25. அங்காரக, 

26, இந்திர, 

27. விவஸ் வான், 

28, தீப்தாம்சு, 

29. சுசி, 

30. சவுரி, 

31. சனைஸ்சர், 

32. பிரம்மா, 

33. விஷ்ணு, 

34. ருத்ர, 

35, ஸ்க்ந்த, 

36.வருண, 

37.யம, 

38.வைத்யுதாக்நி, 

39. ஜடாராக்னி, 

40. ஐந்தநாக்னி, 

41. தேஜபதி, 

42. தர்மத்வஜ, 

43. வேத கர்த்தா, 

44. வேதாங்க, 

45. வேதவா ஹன், 

46. க்ருத, 

47. த்ரேதா, 

48. துவா பர, 

49. சர்வமலாச்ர்ய கலி, 

50. கலா காஷ்டா முஹூர்த்த ரூப சமய, 51. ராத்ரி, 

52.யாமம், 

53, க்ஷணம், 

54. ஸம்வத் ஸரகர், 

55. அச்வத்த, 

56.காலசக்ரப்ரவர்த்தக விபாவசு, 57.ஸாஸ்வத புருஷ், 

58. யோகி, 

59. வ்யக்தாவ் யக்த, 

60. சனாதன, 

61. காலாத்யக்ஷ, 

62. ப்ரஜாத்யக்ஷ, 

63. விசுவகர்மா, 

64. தமோனுத், 

65. வருண, 

66. சாகர,

67.ஜீமுத,

68.அம்சு,

69. ஜீவன், 

70. அரிஹா, 

71. பூதாச் ரய, 

72.பூதபதி, 

73. சர்வலோக நமஸ்க்ருத, 

74.சரஷ்டா, 

75. சம்வர்தக, 

76. வஹ்னி, 

77. சர்வாதி, 

78. அலோலுப, 

79. அனந்த, 

80, கபில, 

81. பானு, 

82, காம்த, 

83. சர்வதோ முக, 

84, ஜய, 

85. விசால, 

86. வரத, 

87. சர்வதாது, நிஷேசிதா, 

88. மனசுபர்ண, 

89. பூதாதி, 

90. சீக்ரக, 

91. ப்ராணதாரக, 

92. தன்வந் திரி, 

93. தூமகேது, 

94. ஆதிதேவ, 

95. அதிதி சுத, 

96. த்வாதசாத்மா, 

97. அரவிந்தாக்ஷ, 

98. பிதா-மாதா பிதா மஹ, 

99.ஸ்வர்கத்வார ப்ரஜாத்வார், 100.மோக்ஷத்வார த்ரிவிஷ்டப, 

101. வேத கர்த்தா, 

102. ப்ரசாந்தாத்மா, 

103. விஸ் வாத்மா, 

104. விசுவதோமுக, 

105. சராச ராத்மா, 

106. சூக்ஷமாத்மா, 

107, மைத் ரேய, 

108.கருணான்வித


அட்சய திருதியை அன்று சூரிய உதய நேரத்தில் நல்ல சிந்தனையுடன் இந்த நாமாக்களை சொல்லி சூரிய பகவானை வணங்குபவர்களுக்கு நல்ல மண வாழ்க் கையும் மக்கள் செல்வம் மற்றும் தன தானியங்களும் கிடைக்கும். முற்பிறவி யில் நன்மைகளை அதிகம் செய்தவருக்கு இந்த துதியை சொல்ல வேண்டும் என்ற சிந்தனை உண்டாகும் என்று கூறுவார்கள், இன்று செய்யக்கூடிய நல்ல காரியங்கள், தான, தர்மங்களை பல மடங்காக சூரிய பகவான் அருளால் இந்த துதியை கூறி பெற முடியும்.

மன்னராக மாற்றிய தண்ணீர் தானம்

அட்சய திருதியை அன்று தண்ணீர் தானம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு கதை கூறப்படுகிறது.

    ஒரு முறை பாஞ்சாலை நாடு கடும் வறட்சியில் சிக்கித் தவித்தது. அப்போது பூரியசஸ் என்ற மன்னன் நாட்டை ஆட்சி செய்து வந்தான். திடீரென்று அவனது நாட்டை, எதிரிகள் கைப்பற்றிக் கொண்டனர். மன்னன் எதிரிகளின் கையில் சிக்காமல், தன் மனைவியுடன் காட்டுக்குள் தப்பி ஓடினான். அங்கு சில முனிவர்களை சந்தித்தான். அவர்களிடம், 'என்னுடைய இந்த நிலைக்கு என்ன காரணம்?' என்று கேட்டான். பூர்வ ஜென்மத்தில் நீ செய்த பாவங்கள் காரணமாக உனக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே போல் அட்சய திருதியை தினத்தில் நீ செய்த தண்ணீர் தானம்தான், உன்னை மன்னராக ஆக்கியிருக்கிறது. இருப்பினும் நீ செய்த பாவங்களின் பலனை அனுபவிக்க வேண்டும்' என்றனர்.


    இதையடுத்து அந்த மன்னன் காட்டில் வசித்தபடி, நாராயணரை நினைத்து தியானம் செய்து வந்தான். மேலும் அட்சய திருதியை நாளில், வெயிலில் வருபவர்களுக்கு நிழல் கொடுத்தும், குடிநீர் தானம் செய்தும் தொண்டு செய்து வந்தான்.


    மன்னனின் தொண்டைக் கண்டு ஸ்ரீமன் நாராயணர் அவனுக்குக் காட்சியளித்தார். மன்னன் இறைவனிடம், 'சுவாமி! நான் அடுத்த பிறவியில் புழுவாய் பிறந்தாலும், உன்னிடம் மாறாத பக்தி கொண்டவனாக இருக்க வேண்டும்' என்றான். அதற்கு இறைவனும் அவன் எண்ணப்படியே வரம் கொடுத்தார்.

    பூரியசஸ் மன்னனுக்கு, மகாவிஷ்ணு தரிசனம் கொடுத்த நாள் அட்சய திருதியை ஆகும். அவன் செய்த தானத்தின் பலனாக, சில நாட்களில் உறவினர்கள் சிலர் உதவியுடன், மீண்டும் ஆட்சியைக் கைப் பற்றினான். அதன்பிறகு நல்ல முறையில் ஆட்சி செலுத்தினான்.


செல்வம் அருளும் அட்சய திருதியை | Akshaya Tritiya 2024

    சிந்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, 'அட்சய திருதியை' எனப்படுகிறது. 'அட்சயம்' என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும், அதனால் அட்சய திருதியை அள்ள, அள்ள குறையாமல் செல்வத்தை அள்ளி தரும் சிறப்பு மிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.




    வனவாச காலத்தில், சூரிய பகவானை வேண்டி தர்மர் அட்சய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அட்சிய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அட்சய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவ பெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று. பிரம்ம ஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.





    தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அட்சய திருதியை அன்று ஏழைகளுக்கு தாம் செய்தால், அது பலமடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த முதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான வாழ்வு அமையும்.

விரதம் இருக்கும் முறை


அட்சய திருதியை தினத்தில் அதிகாயை எழுந்து நீராடி, பூஜை அறையில் கோலமிட வேண்டும். லட்சுமி நாராயணன், சிவசக்தி, அன்னபூரணி, குபேரன் படங்கள் வைந்து, சந்தனம், குங்கும் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின் முன்பு குத்துவிளக்கு காமாட்சி விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். பூஜை அறையில் போடப்பட்ட கோலத்தின் மீது பலகையை வைத்து, அதன் மீது கோலம் போட வேண்டும். ஒரு சொம்பில் அரிசி மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை போட வேண்டும். பின்னர் அந்த சொம்பில் நீர் நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். பின்னர் சொம்பின் மேல் தேங்காய் வைத்து, அதைச் சுற்றிலும் மாவிலையை வைத்து கலசமாக தயார் செய்து பலகையில் வைக்க வேண்டும்.

பிறகு கும்பத்தின் முன்பு நுனி வாழை இலையில் அரிசியை பரப்பி, அதன் மீது விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன் அருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமம் இட்டு பூ போட வேண்டும். மேலும் பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களை கலசத்திற்கு அருகில் வைத்து தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் அளவற்ற பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 

அட்சய திருதியை - தானங்கள்


அட்சய திருதியை நானில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மாரணத்தைத் தடுக்கலாம், கால்நடைகளை தானமாக வழங்கினால், வாழ்வு வளம் பெறும். மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால், பாவவிமோசனம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும்.







சித்ரா பௌர்ணமி அன்று வீட்டில் ஒலிக்க வேண்டிய பாடல்கள்

பாவத்தைப் போக்கும் இந்த சித்ரா பௌர்ணமி அன்று இதை தவறாமல் கேளுங்கள் | Chithra pournami 2024 |mavasiva


Play Now



மரணபயம் போக்கும் சித்திரகுப்தர் மந்திரம்


சித்ரகுப்த மூல மந்திரம்


சித்ரகுப்தம் மஹா ப்ராக்ஞம் லேகணிபத்த தாரிணம் சித்தர ரக்னாம் பரதரம் மத்யஸ்தம் ஸர்வ தேஹினாம்

இந்த ஸ்லோகத்தை கூறி சித்திரகுப்தரை வழிபடுவது நலம் தரும் சித்ரா பொளர்ணமியன்று உப்பில்லாமல் சாப்பிட்டு விரதம் இருப்பது உத்தமம்

Benefits of chanting Chitragupta Gayathri Mantra


Chanting the Chitragupta Gayatri mantra is believed to carry several spiritual and psychological benefits according to Hindu tradition. Chitragupta is regarded as the divine accountant or recorder of human deeds, both good and bad, in Hindu mythology. Here are some of the potential benefits associated with chanting the Chitragupta Gayatri mantra:




Play Now

Invoke Divine Guidance: Gayatri mantras are considered to be powerful invocations that connect the chanter with the divine energy associated with the deity. Chanting the Chitragupta Gayatri mantra may help in invoking the guidance and blessings of Chitragupta for righteous living and clarity of thought.


Clarity of Mind: Regular chanting of Gayatri mantras, including the Chitragupta Gayatri, is believed to enhance mental clarity and focus. It can help individuals attain mental peace and stability, thereby aiding in decision-making and problem-solving.


Karma Balancing: Chitragupta is believed to keep a meticulous account of one's deeds and is associated with the concept of karma. Chanting the Chitragupta Gayatri mantra with sincerity may help in acknowledging and understanding one's actions, leading to a balanced approach towards life and its consequences.


Purification of Intentions: By chanting the Gayatri mantra dedicated to Chitragupta, individuals may seek purification of their intentions and actions. It can serve as a reminder to act ethically and with integrity, knowing that all deeds are being recorded and accounted for.
Protection from Negative Forces: It is believed that regular chanting of Gayatri mantras creates a protective shield around the individual, guarding against negative influences and energies. Chanting the Chitragupta Gayatri mantra may offer spiritual protection and ward off obstacles on the path to righteousness.


Cultivation of Gratitude: Chanting the Gayatri mantra dedicated to Chitragupta can instill a sense of gratitude towards the divine for the gift of life and the opportunity to evolve spiritually. It can foster a deeper connection with the cosmic forces governing the universe.


Self-Reflection and Growth: The practice of chanting mantras encourages self-reflection and introspection. Chanting the Chitragupta Gayatri mantra may inspire individuals to assess their actions and motivations, leading to personal growth and spiritual evolution.

 சித்ர குப்த காயத்ரி மந்திரம் | Chithra gupta Gayathri Mantra

"சித்ர குப்த காயத்ரி மந்திரம் "
ஓம் லேகிநி ஹஸ்தாய வித்மஹே பத்ரதராய
தீமஹி தந்நோ சித்ர ப்ரசோதயாத் !
" Chitra Gupta Gayatri Mantra "
Om Lekhini Hasthaya Vidmahe Bhadradaraya
Thimahi tanno chitra prasodayat!

Chant this mantra for 108 times to get best results.


யாரும் சொல்லாத 30 அதிசூட்சம டிப்ஸ் | 30 tips that gives success in life ...


யாரும் சொல்லாத 30 அதிசூட்சம டிப்ஸ் | 30 tips that gives success in life | Episode - 5 #mahasreerajhan https://youtu.be/DZshYStqIb4